பூம்பாறை முருகன்
ஆன்மீக தேடலில் உள்ளஅனைவர்க்கும் ஆதிகுரு சேனல் சார்பாக என் பணிவான வணக்கங்கள்
கடந்த பதிவில்
எவ்வளவோ தெய்வ வடிவங்கள் இருக்க, போகர் ஏன் முருகப்பெருமானின் உருவத்தினை
நவபாஷாணத்தால் வடிக்க வேண்டும் என்றும்?
அப்டியே வடித்தாலும் ஆண்டிக் கோலத்தில் வடிக்கவேண்டிய அவசியம் என்ன என்றும்
பூகோள அமைப்பிற்கும் பழநி ஸ்ரீ தண்டாயுதபாணி சிலைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதையும் பார்த்தோம்
ஒருவேளை நீங்கள் அந்த விடியோவை பார்க்கவில்லை என்றால் description ல் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது
அதனை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம்
மேலும் அந்த வீடியோவின் இறுதியில் போகர் பழனி முருகனை மட்டும் நவபாஷாணத்தால் வடிக்கவில்லை
மேலும் இரண்டு சிலைகலை செய்துள்ளார் என்று கூறியிருந்தோம்
அந்த இரண்டு சிலைகள் உள்ள கோவில்களை தரிசிப்பது அவ்வளவு சுலபம் அல்ல
அதிலும் மூன்றாவது சிலைக்கும் இடத்தை யாருமே நெருங்க முடியாத ஒரு புதிரான காட்டில் போகர் வைத்துள்ளார்
அந்த இரண்டு சிலைகள் இருக்கும் கோவில்கள் எங்குள்ளன அதன் வரலாறு என்ன போன்ற அனைத்தையும்
இந்த பதிவில் பார்க்கலாம்
ஆதிகுரு சேனலில் முருகனை பற்றி அரிய தகவல்களை சொல்லிக்கொண்டு வருகிறோம்
அதனை கேட்டு பயன்பெற தவறாமல் சேனலை சூபிசகிரிபே செய்து கொள்ளவும்
போகர் பெருமான் வடிவமைத்த இரண்டாவது நவபாஷாண சிலை
கொடைக்கானலில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூம்பாறை கிராமதில் உள்ளது
நாம் பல முறை கொடைக்கானலுக்கு சென்று இருப்போம் ,
அங்கிருக்கும் முருகன் கோவிலான குறிஞ்சி ஆண்டவர் கோவிலுக்கும் பலரும் சென்று இருப்போம்
ஆனால் சற்றே தொலைவில் இருக்கும் இந்த பூம்பாறை கோவிலுக்கு அவ்வளவாக சென்றிருக்க மாட்டோம்
இது எதேர்சையாக நடப்பது அல்ல
இந்த அனுபவம் எனக்கும் உள்ளது
இது கடந்த முறை ஏன் பூம்பாறை சென்றும் கூட முருகப்பெருமானை தரிசிக்க முடியவில்லை
இந்த முறை அதற்கான வாய்ப்பு கிடைத்தது
இதற்கு என்ன கரணம் என்று பார்க்கும் பொது , அதற்கான விடை பூம்பரி முருகன் கோவிலின் தல வரலாற்றில் கிடைத்தது
ஆம்
இன்னார் இந்த நாள் இத்தனை மணிக்கு என்னை தரிசிக்கலாம் என்று அந்த பூம்பாறை முருகன் முடிவெடுப்பதனால் தான்
பலருக்கும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தும் கிடைக்காமலும் போகிறது
பழனி தண்டாயுதபாணி சிலையை வடித்து பழனி மலை குன்றில் பிரதிஷ்டை செய்த் போகர்
பின்னர் சீன பயணம் முடித்து மறுபடியும் தமிழகம் வந்து அடுத்த இரண்டு சிலைகளை வடித்துள்ளார்
இதில் பூம்பாறை முருகன் நவபாஷாணத்தால் ஆனவர் என்றும் இல்லை , தச பாசனத்தால் ஆன குருமூப்பு என்னும் வகையை சேர்ந்தவர் என்றும் இரு கருத்து கூறப்படுகிறது
இதில் எது உண்மை என்று அந்த போகர் பெருமானுக்கு மட்டுமே தெரியும்.
பூம்பாறை முருகனின் பெயர் குழந்தை வேலப்பர் ,
போகர் இந்த முருகன் சிலையை பூம்பாறையில் பிரதிஷ்டை செய்ய என்ன காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ந்த பொது
சில விஷயங்களை யூகிக்க முடிந்தது .
கொடைக்கானலில் இருந்து பூம்பாறை செல்லும் போது இடது புறத்தில் ஒரு view point வரும் அதற்கு பழனி temple view பாயிண்ட் என்ரூ பெயர்
அங்கிருந்து பார்த்தால் பழறி மலையை தரிசிக்கலாம்.
பூகோள ரீதியாக பழனி மழைக்கு செவ்வாய் கிரகத்திற்கும் தொரடர்பு இருப்பதை பற்றி கடந்த வீடியோவில் பார்த்தோம்
அதே நேர்கோட்டில் தான் இந்த பூம்பாறை அமைந்திருப்பதால் தான் என்னவோ போகர் அடுத்த சிலையை இந்த பூம்பாறை பகுதியில் பிரதிஷ்டை செய்துள்ளார்
ஒரு பெரிய விளையாட்டு மைதானத்தை நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ள ஒரு திடலின் ஓரத்தில் அமைந்துள்ளது இக்கோவில்.
ராஜகோபுரம் எதுவுமில்லை.
மூலஸ்தானத்தில் மேல் உள்ள கோபுரம் மட்டுமே.
குழந்தை வேலப்பர் மேற்கு திசையை நோக்கி அருள் பாலிக்கிறார்.
குழந்தை வடிவம் என்பதாலோ புன்னகை பூத்து நிற்கும் அருள் உருவம்.
குழந்தை வேலாயுத சுவாமி கோயிலுக்கு மூன்று ஆயிரம் ஆண்டுகள் புராண வரலாறு உள்ளது.
மூன்றாம் பொது ஊழிக்கும் முன் இருந்து 12 ஆம் பொது ஊழி வரை தமிழகம் கொங்கு கேரளாவை ஆட்சி புரிந்த சேரமணர்களில் ஒருவர்
பூம்பாறை முருகன் விக்கிரகத்தின் மகிமைகளை தெரிந்து கொண்டு விக்ரகத்தை சுற்றி கருவறை மண்டபத்தை காட்டியுள்ளார்.
கருவறை சுற்றுச்சுவர் மண்டபத்தின் அமைப்பை பார்த்தாலே பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது கோவில் என்று நம்மால் பூரித்து கொள்ள முடியும்.
அதுமட்டுல்ல பூம்பாறை முருகன் கோவில் மஹாபாரதரோடும் சம்பந்தப்பட்டுள்ளது
ஆம் பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின் பொது அவர் மேற்கு தொடர்ச்சி மலையில் வாசித்த காலத்தில்
இந்த பூம்பாறை முருகனை வழிபட்டதாகவும் சில செய்திகள் சொல்லப்படுகின்றன .
மேலும் இக்கோயில் மிகப்பழமை வாய்ந்தது என்பதற்கு இங்குள்ள கிரந்த எழுத்துக்களும் பழங்கால சிலை அழகும் சான்றாக உள்ளது.
முருகன் கோவில் என்றாலே பெருமை தான் அதிலும் அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடல் பெட்ரா தளம் என்று
அதன் தனித்துவம் வேறு
ஆம் கீழ் வரும் பாடல் பூம்பாறை முருகனை குறித்து அருணகிரி நாதர் பாடியது
பூந்தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு பூம்கதலி கோடி
திகழ் சோலை
பூம் தடம் உலாவு கோம்பைகள் குலாவு பூம்பறையில் மேவும்
பெருமாளே.
இதன் அர்த்தம்
பூக்களும் தளிர்களும் விளங்கும் வேங்கை மரங்களும்,
பலா மரங்களும், அழகிய வாழை மரங்களும் கோடிக் கணக்காகத் திகழும்
சோலைகளுடன்,அழகிய குளமும், உலவித் திரியும் கோம்பை* நாய்களும்
இருக்கும் பூம்பறையில்** வீற்றிருக்கும் பெருமாளே.
அருணகிரிநாதர் பூம்பாறை வந்த சமயத்தில் நிகழ்த்தினது மிகழ்வு மிகவும் சுவாரஸ்யமானது
கொடைக்கானலில் இருந்து சுமார் 18 கிம் தூரத்தில் இருக்கும் பூம்பாறை கோவிலை அடைய காரில் சென்றாலே சுமார் 1 மணி நேரம் ஆகும்
ஆருணகிரிநாதர் வாழ்ந்தது பல நூறு வருடங்களுக்கு முன்
அந்த சமயத்தில் இந்த பகுதி எவ்வளவு பெரிய வனமாக இருந்திருக்கும்
குளிர் , மிருகங்கள் என்று எத்தனையோ இடையூறுகள் இருந்திருக்கும்
இருந்தும் அருணகிரி நாதர் பூம்பரி தரிசித்து இருக்கிறார்
ஒரு பக்தன் தன்னை காண இவ்வளவு சிரமப்பட்டு வந்தால் அந்த முருகன் சும்மாவா இருப்பான்
ஆம் அன்று இரவு அருணகிரிநாதர் இக்கோவிலில் உறங்கி கொண்டிருக்கும் பொது
அதே குழந்தை ரூபத்தில் கட்சி கொடுத்து இருக்கிறார் நம் பூம்பாறை முருகன்
இக்கோயில் அருகிலேயே அருணகிரிநாதருக்கும் சிலையுடன் கோவில் உள்ளது.
அதை போலவே போகரின் திருவுருவ படமும் வைக்கப்பட்டுள்ளது
முன்பே சென்னது போல யார் ஒருவருக்கு இந்த முருகன் தரிசனம் தர நினைக்கின்றாரோ அவர் மட்டுமே இந்த ஆல்யாத்திற்கு செல்ல முடியும் என்பது ஐதீகம்
இந்த இரண்டு இடங்களுக்கு மத்தியில் புதிதாக ஒரு தேவி கோவிலும் கட்டப்பட்டுள்ளது. அதையும் அவசியம் தரிசிக்க வேண்டும்.
இனி மூன்றாவது சிலை இருக்கும் இடமான மதிகெட்டான் சோலையை பற்றி பார்க்கலாம்.
உலகில் பல மர்மமான இடங்கள் உள்ளன அதில் ஒன்று தான் இந்த மதி கெட்டான் சாலை
கொடைக்கானலில் உள்ள பேரிஜம் பகுதிக்கு அருகில் 12 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது
மதிகெட்டான் சோலை
இந்த பகுதிக்குள் செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது.
இதுவரை இந்த பகுதிக்குள் நுழைந்த 12 பேர் உயிருடன் திரும்பவில்லை
இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
இந்த பகுதியில் ஒரு விசித்திரமான மூலிகைச்செடி ஒன்று இருக்குமாம்.
அந்த மூலிகைச்செடியை யாரவது மிதித்துவிட்டால் அவர்களின் மதி மழுங்கி எப்படி வெளியே செல்வது என்று கூடத் தெரியாமல் இந்தக்காட்டிற்குள்ளேயே சுற்றித் திரிவார்களாம்.
பின்னர் அங்கேயே மதி கெட்டு இறந்து விடுவார்களாம்.
உள்ளே சென்றவர்கள் வெளியே வராமல் போனதற்கு இதுதான் காரணம் என்று சொல்லப் படுகிறது.
அதே போல இங்கே பூநாகப் பூக்கள் என்ற மர்மமான ஒரு செடி வளருமாம்.
அதில் இருந்து உதிரும் பூக்கள் கீழே விழுந்து மக்கிய உடன் ஒரு வித வாசனை வரும்.
அந்த வாசனையை சுவாசிப்பவர்கள் மதி மயங்கி விடுவார்கள்.
ஒருவேளை இந்தக் காட்டை விட்டு வெளியே வந்தாலும் பித்து பிடித்ததை போல சுற்றி
சில நாட்களிலேயே உயிரி ழந்து விடுவார்கள் என்று சொல்கிறார்கள்.
ஆனால் பூநாகப் பூ என்ற ஒரு செடியே இல்லை என்று தாவரவியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள். இது உண்மையோ, பொய்யோ தெரியாது.
ஆனால் கொடைக்கானலில் இருக்கும் இந்த மதிகெட்டான் சோலைக்குள் உள்ளே சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பவில்லை என்பது மட்டும் உண்மை.
எதுவுமே இல்லாமல் ஒரு அரசாங்கமே உள்ளே செல்ல த டை விதித்துள்ளது என்றால் கண்டிப்பாக எதோ ஒரு மர்மம் இந்த காட்டில் உள்ளது
அந்த ரகசியத்திற்கான விடை அந்த போகர் மஹாமுனிக்கு மட்டுமே தெரியும்
அங்கு போகர் ஒரு சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார் என்ற செய்திக்கு எந்த ஆதாரமும் காணப்படவில்லை.
ஒன்றிரண்டு இடங்களில் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருவேளை மதி கெட்டான் சோலையில் போகர் நவபாஷாண சிலையை பிரதிஷ்டை செய்தது.
உண்மையென்றால் இதில் மிக்பெரிய சூட்சுமம் அடங்கியுள்ளது
அதாவது முதல் நவமாஷாண சிலையான பழகி ஸ்ரீ தண்டாயுதமானியை யாரும் எளிதில் தரிசிக்க முடியும்.
நான் எளிதில் என்று கூறுவது அங்கு செல்லும் வழித்தடங்களை தான்
அங்கு சாமான்ய மனிதர்களுக்கு எளிதில் முருகனின் அருள் கிடைக்கும்படி போகர் பாதிஷ்டை செய்திருக்கலாம்.
இரண்டாவது சிலை நிறுவப்பட்ட இடமான பூம்பாறை முருகனை தரிசிப்பதற்கு சற்று பிரத்தைப் பட வேண்டும்
உண்மையில் முருகனை காண வேண்டும் என்ற ஆவல் இருக்கவேண்டும் , கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் பொது அப்படியே பூம்பாறை முருகனை தரிசிக்கலாம் என்று நினைத்தாள் அது நடக்காது
அங்கு செல்ல முருகனின் அனுமதி வேண்டும்
ஆனால் மூன்றாவது சிலை அமையப்பட்டதாக சொல்லப்படும் மதி கொட்டான் சோலை பகுதிக்குல்லே யாரும் முடியாதவண்ணம் உள்ளது.
இதை இப்படியும் எடுத்துக்கொள்ளலாம்
இறைவன் ஈசன் அருவம், அருவுருவம் மற்றும் உருவம் என 3 நிலைகளில் அருள்பாலிக்கிறார்.
அதாவது இறைவன் உருவம் இல்லாத நிலையில் சிதம்பரத்தில் சிதம்பர ரகசியமான ஆகாய வெட்டவெளியாக அரூப நிலையில் அருள்பாலிக்கிறார்.
பெரும்பாலான சிவாலயங்களில் அருவுருவமாக, சிவலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
சிவபெருமான் முழு உருவமாக நடராஜர் கோலத்தில் சிவமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
அதனை போலவே முருகண மஹிகேட்டான் சோலையிலும் அரூப நிலையிலும்
அருவுருவமாக குழந்தை வடிவில் பூம்பாறையிலும்
முருகனின் முழு ரூபமான தண்டாயுபாணி கோலத்தில் பழனியில் நிற்கும்படி போகர் வடிவமைத்து இருக்காலம்
இது ஒரு அனுமானமே
முன்பே சொன்னது போலே இந்த சூட்சுமங்கள் அனைத்திற்குமான விடை அந்த போகர் பெருமானுக்கு மட்டும் தான் தெரியும்
எப்படியிருந்தாலும் முருகன் தன்னை உலகிற்கு வெளிக்காட்ட வேண்டும் என்று வேண்டும் என்று நினைத்தாள் தானகவே அந்த சிலை வெளிப்படும்
முருகன் எடுத்து 1 அவதாரம் தான் என்றாலும் அவருக்கு 22 வடிவங்கள் உள்ளன
இவற்றில் சேனாதிபதி சரவண பவன் கார்த்திகேயன் சண்முகன் தாரகாரி கிரவுன்சபேதனன் சோனாநி ஆகிய திருவருவங்களுக்கு ஆறு திருமுகங்களும்
சுந்தரமண்யர் என்ற திருநாமத்தில் அக்னி ஜாத சுப்ரமணியரு சௌரபேய சுப்பிரமணியரு என்று இரண்டு வடிவங்கள் உள்ளன அதில
அக்னி ஜாத சுப்ரமணியருக்கு இரு திருமுகங்களும்
சௌரபேய சுப்பிரமணியருக்கு நான்கு திருமுகங்களும் காணப்படுகின்றன
ஏனைய திருஉருவங்களுக்கு ஒரு திருமுகம் மட்டுமே காணப்படும்
இதில் இந்த சௌரபேய சுப்பிரமணியராய் தரிசபித்து அரிதிலும் அரிது
அவரை சதுர் முக முருகன் என்றும் அழைப்பர்
இவராய் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபதியில் தரிசிக்கலாம்
அடுத்த பதிவில் இந்த க்வில் பற்றி விரிவாக பார்க்கலாம்





