பூரி ஜெகநாதர்
ஒடிசா மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பூரி ஜகந்நாதர் திருக்கோயில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகிறது.
இங்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ரதயாத்திரை மிகவும் பிரசித்தமானது.
ஆஷாட மாதத்தில் நடைபெறும் இந்த ரதயாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள்.
அதே போல இந்த ஆண்டிற்கான ரதயாத்திரை இரண்டு நாட்களுக்கு முன் துவங்கியது
இந்த தேரோட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
துரதிஷ்டவசமாக கூட்ட நெரிசல் மற்றும் கடுமையான வெயில் காரணமாக
சுமார் 700க்கும் அதிகமானோர் உடல் நிலம் பாதிக்கப்பட்டதோடு
3 பேர் மரணமடைந்துள்ளனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ரத யாத்திரை ஒரு இரவு தாமதமாகவும் செய்துள்ளது.
தன்னுடைய உயிரே போனாலும் சரி
பூரி ஜெகநாதரை தரிசித்தால் போதும் என்று
ஆண்டுதோறும் இதனை லட்சம் மக்கள் பூரி ஜெகன்னாதர் கோவில் தேரோட்டத்திற்கு செல்ல காரணம்
கிருஷ்ணா பகவானின் உடலின் ஒரு அங்கம் மூலவ விக்ரகமாக இருப்பதாகவும்
இன்றைக்கும் கிருஷ்ணர் அந்த கோவிலில் வாழ்வதாகவும்
கிருஷ்ணர் தனது மதிய உணவை பூரி கோவிலில் தான் உண்பதாக ஐதீகம்
இதற்கெல்லாம் இன்றும் அங்கே ஆதாரங்கள் உள்ளன.
இதனால் ஜெகநாதர் அவரை தரிசிக்க வரும் பக்தர்களின் பாவங்களை போக்கி கர்மங்களை அழித்தூ முக்தி தருவதாகவும் ஐதீகம்.
குறிப்பாக ஆண்டு கோறும் நடக்கும் ரத யாத்திரையில் பங்கேற்றால் மேலும் பலன் அதிகம் என்று கூறப்படுகிறது
இது மட்டுமல்ல
அக்கோவிலில் மூன்று மூலவ விக்ரகங்கள் உள்ளன, ஆனால் அவை முழுமையடையாத விக்ரகங்களாக அமைக்கப்பட்டுள்ளன
பொதுவாக நாம் வழிபடும் விக்ரகம் செய்தமடைந்தால் உடனே அதனை
ஆற்றிலோ கடலிலோ போட்டுவிடுவோம்
ஆனால் இங்கே அது முற்றிலும் எதிர்மறையாக அமைந்துள்ளது தான் இந்த கோவின் தன்மையை தனித்து காட்டுகிறது.
இக்கோவில் உருவான வரலாறு கிருஷ்ண அவதாரத்தின் முடிவில் இருந்து துவங்குகிறது
வனத்தில் கோரைபுற்களுக்கு நடுவே படுத்திருந்த கிருஷ்ண பகவானின் பாதங்களை
மானின் காதுகள் என்று நினைத்த ஜரா என்ற வேடுவன்
அதனை நோக்கி அம்பு ஏய்ய
அதோடு கிருஷ்ண பகவானின் ஸ்தூல அவதாரம் முற்று பெறுகிறதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதன் பின் பல இரசியங்கள் நிகழ்ந்தன.
கிருஷ்ணர் மீது அம்பெய்த ஜரா அதன் பின் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி
இதற்கு பிராயசித்தம் செய்யும் விதமாக
கிருஷ்ணருடைய உடலின் ஒரு பகுதியை சிலாரூபமாக்கி
தன்னுடைய வம்வவெளியினர் வழிபடுவதற்காக
யாருக்கும் தெரியாமல் அந்த வனத்தில் மறைத்து வைத்து
அவர்களின் குழுவினர் மட்டும் பூஜித்து வருகின்றனர்.
அந்த சிலா ரூபத்திற்கு நீல மாதவர் என்று பெயர்.
இப்படி இருக்கையில் இந்த நீல மாதவரின் அருளை அனைத்தும் மக்களும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பகவான் கிருஷ்ணர்
அதற்கான நிகழ்வுகளை ஏற்படுத்துகிறார்.
இந்த காலகட்டத்தில் அப்பகுதியை ஆட்சிபுரிந்த மண்ணின் பெயர் இந்திரத்துய்மன்
மிக சிறந்த விஷ்ணு பக்தர்
நிலமாதவர் பற்றிய செய்திகள் எப்படியே தெரிந்துகொண்ட மன்னருடைய ஒற்றர்கள் இந்த செய்தியை அவரிடம் தெரிவித்தனர்
இதனை உறுதிப்படுத்த
.மன்னர் தன்னுடைய தலைமை குருவின் மகன் வித்யாபதியயை மாறுவேடத்தில் அங்கு சென்று பார்த்துவருமாறு கூறுகிறார்
தன்னை ஒரு வேடுவான் போல சித்தரித்துக்கொண்டு அந்த குழுவோடு சேர்கிறார் வித்யாபதி
யாருக்கும் தெரியாமல் சிலை எங்கே உள்ளது என்று தேடிக்கொண்டுதார்
ஆனால் சிலையை கண்டுபிடிக்க முடியவில்லை
இந்த சமயத்தில் அந்த குழு தலைவரின் மகளோடு காதல் ஏற்பட்டு அவரை மனந்து கொள்கிறார் வித்யாபதி
திருமணத்திற்கு பின் தன மனைவியிடம் நீல மாதவர் சிலை இருக்கும் இடத்திற்கு தன்னை அழைத்து செல்லும் படி கேட்க
மனைவியும் தனது தந்தையரிடம் இதனை பற்றி கூற தந்தையை இதற்கு ஓப்புக்கொள்ளவில்லை
பின்னர் தன் மகளின் தொடர் வற்புறுத்துதலினால் அதற்கு சம்மதிக்கிறார்
ஒருநாள் தன் மருமகன் கண்களை கா.ட்டி காட்டிற்குள் அழைத்து செல்கிறார்
இதனை முன் கூட்டியே அறிந்துகொண்ட வித்யாபதி வழியை தெரிந்து கொள்ள
தான் செல்லும் பாதையில் கடுகை போட்டுக்கொண்டே செல்கிறார்
சிறிது நேரம் கழித்து இடம் வந்துவிட்டதாக கூறி விடயபதியின் கண் கட்டுகள் அவில்கப்படுகிறது
ஒரு குகை போன்ற இடத்தில
தீப்பந்த ஒளியில் நீல மாதவரை தரிசித்த வித்யாபதி மெய் சிலிர்த்து நின்றார்.
சில நாட்கள் கழித்து இந்த செய்தியை தக்க நேரம் பார்த்து மன்னரிடம் தெரிவித்தார்.
இருவரும் மாறுவேடம் அணிந்து நீல மத்தவரை தரிசிக்க வனத்திற்குள் செல்கின்றனர்
அன்று வித்யாபதி விதைத்த கடுகுகல்முளைத்து நீல மதரவர் இருக்கும் பகுதிக்கு அழைத்து சென்றது.
ஆவலோடு குகைக்குள் சென்ற மன்னனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது
மன்னர் குகைக்கு உள்ளே சென்றதும் நீல மாதவர் சிலை மறைந்து விட்டது
நாடு திரும்பிய மன்னர் மிகவும் மன வருத்தம் அடைந்து
அந்த சிலைக்கு ஒரு பிரம்மாண்ட கோவில் கட்டத்தான் தான் அங்கு சென்றதாக
கிருஷ்ணரை நினைத்து மனமுருகி பிராத்தித்தார்
அன்றிரவு மன்னரின் கனவில் க்ரிஷ்ன பகவான் தோன்றி
நீ எங்கு நினைக்கிறாயே அங்கே கோவில் கட்டு அங்கே நான் குடிபுகுவேன்
அது பூலோக வைகுண்டமாக திகழும் என்று கூறி மறைகிறார்
உடனே வாஸ்து வல்லுனர்களையும் ஜோதிடர்களும் அழைத்து சரியான பூகோள அமைப்பில் ஒரு இடத்தை தேர்வு செய்து
பிரமாண்ட கோவிலை கத்தினார் இந்திரத்துய்மன்
அந்த கோவில் தான் தற்போதைய பூரி ஜெகநாதர் கோவில்.
ஆனால் நீல மாதவர் இந்த வந்த நிகழ்வு, தான் மேலும் சுவாரசியமானது.
கிருஷ்ணரின் வாக்கை ஏற்று கோவில் உருவாகி விட்டது
.ஆனால் மூலவர் சிலை பற்றி ஒரு தகவலும் மன்னருக்கு கிடைக்கவில்லை
இதனால மன்னர் மறுபடியும் கிஷ்ணபகவானிடம் முறையிட
அன்றிரவு மறுபடியும் கிருஷ்ணர் கணவில் தோன்றி
நாளைக்கு காலை கடற்கரைக்கு செல் அங்கே கடலில் நிறைய மரக்கட்டைகள் மிதக்கும்
அதில் மூன்று உன்னிடம் வரும்
அந்த கட்டைகளை விக்ரகங்களாக வடித்து கோவிலில் பிரதிஷ்டை செய் என்று கூறினார்
மன்னர் மறுநாள் கடற்கரைக்கு சென்றார்
கனவில் கூறப்பட்ட்டது போலவே கடலில் நிறைய மரக்கட்டைகள் மிதந்தன
அதில் மூன்று மட்டும் மன்னரிடம் வந்தன
நாட்டின் தலைசிறந்த சிற்பிகளை அழைத்து வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளைப் போல ஒரு சிலை வடிக்க சொல்கிறார்
ஆனால் அவர்கள் எவ்வளவு முயன்றும் சிலை உருப்பெறவில்லை
மன்னர் மனவருத்தம் அடைகிறார்
இந்த சமயத்தில ஒரு வயதான சிற்பி மன்னரிடம் வந்து
தான் இந்த பணிய தான்மேற்கொள்வதாவும் கூறி
அதுக்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார்.
தன்னையும் கட்டைய்களையும் கோவிலினுள் வைத்து பூட்டி விடவேண்டும்
பின்னர் சரியாக 21 நாட்கள் கழித்து கதவை திறந்து உள்ளே வரவேண்டும்
இடையில் எக்காரணத்தை கொண்டும் கதவை திறக்க கூடாது என்று கூறுகிறார்
மன்னரும் இதற்கு ஒப்புக்கொள்கிறார்.
ஆனால் தினமும் மன்னர் கோவிலுக்கு வந்து பூட்டி இருக்கும் கதவுக்கு பக்கத்தில் நின்று சிற்ப வேலை செய்யும் சத்தத்தத மட்டும் கேட்டு சென்றுவிடுவார்.
19 நாட்கள் இப்படியே கழிந்தன 20 ஆம் நாள் மன்னர் கோவிலுக்கு சென்ற பொது உள்ளிருந்து ஒரு சத்தமும் இல்லை
மன்னர் வெகு நேரம் நின்று பார்த்தார் ஒரு சத்தமும் இல்லை
ஒருவேளை வயதான சிற்பிக்கு எதாவது அசம்பாவிதம் நடந்து இருக்குமோ
என்று நினைத்த மன்னர் 20 ஆம் நாளே கதவை திறந்து உள்ளே சென்றார்
உள்ளே மூன்று சிலைகள் இருந்தன , சிற்பியை காணவில்லை.
ஆனால் மூன்று சிலைகளும் முற்றுபெறாமல் இருந்தது
அதாவது கைகளை மட்டும் வடிக்கப்படாமல் இருந்தது.
அப்போது தான் மன்னனுக்கு சிற்பி வடிவில் வந்தது யார் என்று புரிந்தது
உடனடியாக கிரணரிடம் மன்னிப்பு கேட்டு பிரதிஷ்டைக்கு நாள் குறிக்கக்ப்பட்டு
அந்த மூன்று விக்கிரகங்களும் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன
அதுவே இன்று நாம் தரிசிக்கும் பூரி ஜெகநாதர் ஆலயம்.
நீல மாதரின் சக்தியை கிருஷ்ண பகவான் இந்த சிலைகளுக்கு விட்டு சென்றாக ஐதீகம்
நீல மாத்வரின் சக்தி இந்த மூன்று விக்ரகங்களுக்கும் மாற்றப்படும் சடங்கு
ஒவ்வொரு 8, 9, 11.19 ஆகிய ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்டுகிறது
இந்த விழாவிற்கு நபகலிபரா என்று பெயர்.
வானவியல் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில இந்த சடங்குமுறை பின்பற்றபடுகிறது
புதிய சிலை வடிப்பதற்கு 12 முறைகள் பின்பற்றப்படுகிறது
சரியான மரத்தை தேடி வனத்திற்கு சென்று மரத்தை தேர்வு செய்து பூசை செய்த பின் பூரிக்கு கொண்டுவரப்பட்டு சிலை வடிக்கப்படுகிறது
இறுதியாக பழைய விக்ரகங்களில் இருக்கும் நீல மத்வரின் சக்தி இந்த ஒருத்திய சிலைக்கு மாற்றப்பட்டு
பழைய சிலைகள் அந்த கோவில் வலகத்தியே ஒரு இடத்தில பூமிக்குள் புதைக்கப்படுகின்றன
இந்த சக்தி மாற்றப்படும் சடங்கு முறைக்கு பிரம்ம பார்த்தார்த் என்று பெயர்
இந்த சக்தி மாற்றும் 14 நாட்கள் நள்ளிரவில் நடத்தப்பட்டு பின்னர் சிலைகள் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு
மக்கள் தரிசனத்திற்கு வைக்கப்படுகிறது.
நீல மத்வரின் சக்தி அதாவது கிருஷ்ணரின் சக்தி இன்றும் அந்த சிலைகளில் இருப்பதினால்
தினமும் மதிய உணவை பகவான் கிருஷ்ணர் பூரியில் சாப்பிடுவதாக ஐதீகம்
இதற்கு மஹாப்ரசாதம் என்று பெயர்
மஹாப்ரசாதம் என்று முழுக்க முழுக்கு விறகு அடுப்புகளை கொண்டும் மண் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்தி
வெங்காயம் வெள்ளிப்பூண்டு சேர்க்கம்மல் 56 வகையான உணவு பதார்த்தங்கள் தயார் செய்யப்படுகின்றனர்
இந்த 56 எண்ணிக்கைக்கும ஒரு காரணம் உண்டு
கிருஷ்னர் கோவர்த்தன மலையாய் தூக்கி தன் கிராம மக்களை இந்திரன் ஏரோடுத்திய புயலில் இருந்து காப்பாற்றனர்
இந்திரன் ஏற்படுத்திய புயலில் இருந்து தன் கிராம மக்களை காப்பாற்ற நினைத்த பகவான் கிருஷ்னர்
அருகில் இருந்த கோவர்த்தன மலையை தூக்கி நிற்க அணைத்து கிரர்ம மக்களும் அதனடியில் சென்று தஞ்சம் அடைந்தரன்
மலையை தூக்கி கொண்டு ஆன் ஆகாரம் இல்லாமல் கிருஷ்ணர் 7 நாட்கள் நின்றராம்
புயலுக்கு பின் கிரர்ம மக்கள் க்ரிஷ்னருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்த ஏழு நாட்களின் உணவை மொத்தமாக சமைத்து பரிமாறி உள்ளனர்
க்ரிஷ்னர் ஒரு நாளைக்கு 8 வேளை சாப்பிடுவாராம் 7 நாட்கள் 8 வேலை என்றல் 56 முறை வரும் அதனால் 56 வகையான உணவு உணவ பத்தார்களங்களை தயார் சித்து அவருக்கு படைத்தனர்
இந்த 56 ஐதீக முறை தான் பூரியில் பின்பற்றப்படுகிறது
இந்த உணவை உண்பதற்காக தினமும் கிருஷ்ணா பகவான் புரிக்கு வருவதாகவும் கூறப்படுகிறது
200 அடி உயர கோபுரத்தின் மீது எந்த பறவையும் பரப்பது கிடையாது உட்கார்வதும் கிடையாது என்று சொல்லப்படுகிறது
கோவிலுக்கு அருகிலேயே கடல் உள்ளது கடல் காற்றின் சீற்றத்தை தாங்கி நிற்கும் சக்தியை கருட பகவான் வழங்கி வருவதாகவும் பறவை கூட்டத்தின் தலைவரான கருடனின் சக்தி அங்கே இருப்பதால் மற்ற பறவைகள் அங்க வருவதில்லை என்ற செவி வலி செய்தியும் சொல்லப்படுகிறது
ஓவ்வொரு ஆண்டு ஆஷா ட மாதத்தில் ஜெகநாதர் ரத்த யாத்திரை 9 நாட்கள் விழாவாக அனுசிட்டிக்கப்டுகிறது
இதில் ஜெகநாதர் பலப்பற்றா மற்றும் சுவற்றை ஆகிய மூன்று தெய்வங்களும் தங்களது உற்வினர் வீடான கண்டீச்சா கோவிலுக்கு செல்லும் மரபு தான் இந்த தேரோட்ட நிகழ்வு
மிக புனித்துவமான இந்த தேரோட்டத்தில் கலந்துகொள்பவர்களின் பாவங்கள் அனைத்தும் விலகும் கர்மங்களை அனைத்துக் கரையும் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்
இதனால் தான் வருடந்தோறும் லட்சக்கணக்கான அபக்தர்களி பூரி ரத்த யாத்திரையில் கலந்து கொங்கில்ன்றனர்
இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த பூரி ஜெகநாதர்
கேட்பதற்கே மெய் சிலிர்க்க வைக்கவும்





